தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படடிப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளார்.
பிரபல இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் தற்காலிகமாக AV 33 என்ற பெயருடன் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
குறித்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அருண் விஜய் காயமடைந்துள்ளார்.
படப்பிடிப்பின் போது தான் காயமடைந்துள்ளமை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அருண் விஜய் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அருண் விஜய் ஒரு மணிநேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று குறித்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.